மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்

ஆய்வுகள் | மற்றவை by - இமாமுத்தீன் ஹஸனீ On Oct 07, 2023 Viewers: 228


மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்

மஸ்ஜிதின் ஒழுக்கங்கள்

- இமாமுத்தீன் ஹஸனீ 


மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வீடு ஆகும். நாம், நமது வீடுகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது போன்று அல்லாஹ்வின் வீடாகிய மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த செயலுக்கு அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலி கிடைக்கும். அதுபோன்று, மஸ்ஜிதுகள் என்பன அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனை திக்ர் செய்வதற்காகவும், அவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்காகவும் உள்ள இடமாகும். எனவே, அதற்குரிய கடமையை நாம் சரியாக கொடுக்க வேண்டும். மஸ்ஜித்கள் என்பது அல்லாஹ்வின் வீடு மற்றும் மறுமையின் கடைவீதி ஆகும். அதை உலகத்தின் வீடு மற்றும் உலக கடைவீதியைப் போன்று ஆக்கி விடக்கூடாது.


ஐந்து நேர தொழுகைகளைக் கொண்டு மஸ்ஜிதை செழிப்பாக்குவதும் இன்னும் ஜமாஅத்துடன் அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதும் நாம் மஸ்ஜிதுக்கு செய்யவேண்டிய முதல் ஒழுக்கம் ஆகும். மேலும், மஸ்ஜிதின் ஒழுக்கம் சம்பந்தமாக வந்திருக்கும் ஹதீஸ்களின் கருத்துகளை கீழே குறிப்புகளாக வகைப்படுத்தியுள்ளோம். அவற்றை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், நமது மஸ்ஜிதுகளிலும் அதை விழிப்புணர்வு செய்ய வேண்டும்.


1. ஒழுக்கமான, தூய்மையான, முழுமையான ஆடை அணிந்து உடையாலும் உடலாலும் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்துவது. முடிந்தால் நறுமணம் பூசிக்கொள்வது. (கருத்து - அல்குர்ஆன் 7:31)



2. மஸ்ஜிதுக்குள் நுழையும்போது வலது காலை வைத்து நுழைவதும் இடது காலை கொண்டு வெளியேறுவதும் சுன்னா -நபிவழி ஆகும். (ஹாகிம் – 791)



3. மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் துஆ ஓத வேண்டும். உள்ளே நுழையும் போது, அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்ம(த்)திக (இறைவா! உனது கருணையின் வாசல்களை எனக்கு திறந்து கொடு!) என்றும், வெளியேறும்போது, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ஃபழ்ளி(க்)க (இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் உனது அருளை வேண்டுகிறேன்) என்றும் ஓத வேண்டும். (முஸ்லிம் -713)



4. அதுபோன்று, மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாமும் சலவாத்தும் கூற வேண்டும். (அபூதாவூத் – 465)


5. அதுபோன்று, மஸ்ஜிதுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். நுழையும் போது, அவூது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வ ஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும், சங்கைமிகு அவனது முகத்தைக் கொண்டும், நிலையான அவனது ஆட்சியைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்) என்றும், வெளியேறும்போது, அல்லாஹும்மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (இறைவா! விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு என்னை நீ பாதுகாத்துக் கொள்!) என்றும் கூற வேண்டும். (இப்னு மாஜா-773, அபூ தாவூத்-466)



6. தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வரும்போது அவசரப்படாமல், அமைதியாக, இன்னும் கம்பீரமாக வரவேண்டும். (புகாரி -636)



7. மஸ்ஜிதில் நுழைந்து அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழவேண்டும். (புகாரி - 444)



8. மஸ்ஜிதில் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்ற செயலில், பேச்சில் ஈடுபடக்கூடாது. அதுபோன்று, தொலைந்துபோன பொருளை மஸ்ஜிதில் விசாரிப்பதும் அதை அறிவிப்பு செய்வதும் கூடாது. (திர்மிதி - 1321)



9. மஸ்ஜிதில் அமர்ந்து கொண்டு உலக விஷயங்களை, வீணான பேச்சுகளை, இன்னும் தேவையற்ற விவாதங்களை பேசாமல் இருக்க வேண்டும். அதுபோன்று, சத்தமிட்டு பேசுவதும், சிரிப்பதும் கூடாது. (முஸ்லிம் – 1879)



10. அருவருக்கத்தக்க, மோசமான வாடை தரும் வஸ்துக்களை (வெங்காயம், பூண்டு) சாப்பிட்ட நிலையில் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது. (புகாரி – 855)



11. மது அருந்தியவர், குளிப்பு கடமையானவர் மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது. (அல்குர்ஆன் 4:43) (முஸ்லிம்-890)



12. மஸ்ஜிதில் அதான் – பாங்கு சொல்லப்பட்டதற்கு பிறகு அவசியத் தேவையின்றி மஸ்ஜிதை விட்டு வெளியேறக்கூடாது. (முஸ்லிம் – 655)



13. மஸ்ஜிதை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். (அபூ தாவூத் - 455)



14. தொழுகையாளிகளுக்கும், பிற அமல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதக்கூடாது. (அபூ தாவூத் - 1332)



15. மஸ்ஜிதில் நாம் உட்காரும்போது ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒருவரை எழுப்பிவிட்டு நாம் அவ்விடத்தில் உட்காரக்கூடாது. (புகாரி – 6270)




யா அல்லாஹ்! உன்னுடைய இந்த மஸ்ஜிதில் உனது கருணையின் வாசல்களை எங்களுக்கு திறந்து வைப்பாயாக! இந்த இடத்தில் எங்களுக்கு மன நிம்மதியை கொடுப்பாயாக! உன்னை மனஓர்மையுடன் வணங்குவதற்கு வாய்ப்பளிப்பாயாக! மீண்டும் மீண்டும் உன்னை வணங்க வருவதற்கு எங்களுக்கு வாய்ப்பளிப்பாயாக! அல்லாஹ்வே! எங்களுடைய நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாக! ஆமீன். 

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE